;
Athirady Tamil News

24 மணிநேரத்தில் கொன்று குவிக்கப்பட்ட 850 ரஷ்ய துருப்புகள் !!

0

கடந்த 24 மணிநேரத்தில் 850 ரஷ்ய துருப்புகள் கொன்று குவிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் இராணுவம் வெளியிட்ட தகவலில்,

1 இலட்சத்து 24 ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள் பலி

உக்ரைன் மீதான போர் தொடங்கி இன்றுடன் 338 நாட்களை தொட்டுள்ள நிலையில் போரின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 1 இலட்சத்து 24 ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள், கொல்லப்பட்டதாக உக்ரைனிய இராணுவம் கூறியுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் கடந்த ஆண்டு ஆரம்பித்த நிலையில், ஒரு வருடத்தை அண்மித்துள்ளது. இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 1 இலட்சத்து 24 ஆயிரத்து 710 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 850 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனிய ஆயுதப்படைகள் ரஷ்ய இழப்புகள் குறித்த மதிப்பீடுகளை தவறாமல் வெளியிடுகின்றன. ஆனால் மொஸ்கோ மிகவும் அரிதாகவே இழப்புகள் பற்றிய விவகாரங்களை பகிர்ந்துகொள்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.