ஊடக அமையத்தால் மகஜர் கையளிப்பு!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வந்திருந்த போது கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரியும், கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் யாழ். ஊடக அமையத்தின் சார்பில் கடிதம் கையளிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”