;
Athirady Tamil News

கனடாவில் பட்டப்பகலில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிசூடு – மாணவன் கவலைக்கிடம் !!

0

அண்மைக்காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பெருகி வருவது அதிர்ச்சியளித்துள்ள நிலையில் தற்போது கனடாவிலும் அவ்வாறான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதன்படி கனடாவின் ரொறன்ரோ பகுதியில் உள்ள பாடசாலைக்குள் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில் மாணவர் ஒருவர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் அமைந்துள்ள Weston Collegiate Institute பாடசாலை வளாகத்திலேயே பகல் 12 மணி கடந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ரொறன்ரோ மாவட்ட பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் தொடர்புடைய பள்ளியில் படிக்கும் மாணவர் என்பதை உறுதிப்படுத்தியது.

சம்பவத்தில் ஒரு மாணவர் காயங்களுடன் தப்பியுள்ளார், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து மாணவர்கள் அனைவரையும் அருகாமையில் அமைந்துள்ள வெஸ்டன் மெமோரியல் ஜூனியர் பப்ளிக் பள்ளி மற்றும் CR மார்ச்சண்ட் நடுநிலைப் பள்ளிகளுக்கு பத்திரமாக மாற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, துப்பாக்கிச் சூடு முன்னெடுத்த சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து மாயமாகியுள்ளதாகவும், முதற்கட்ட விசாரனை முடியும் வரையில், தாக்குதல்தாரி தொடர்பில் தகவல் எதையும் வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவர் உடனடியாக அவசர நடவடிக்கையின் ஊடாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.