;
Athirady Tamil News

பிரான்சில் ஆசிரியை கொலை- பேய் கொலை செய்ய சொன்னதாக வாக்குமூலம் அளித்த மாணவன்!!

0

பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜீன் டி லஸ் நகரில் உள்ள பள்ளியில் மாணவன் ஒருவன் 52 வயது நிரம்பிய ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். கொலை செய்த மாணவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் கூறிய பதில் போலீசாரை திகைக்க வைத்தது.

எனக்கு பேய் பிடித்திருக்கிறது, ஆசிரியையை அந்த பேய் தான் கொலை செய்ய சொன்னது என்றான். இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியை கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆசிரியை மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.