;
Athirady Tamil News

பேருந்து சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் !!

0

ஹைலெவல் வீதியூடாக பயணிக்கும் அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் 01 மார்ச் 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தின் ஊடாக செல்ல வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி தீர்மானத்திற்கு மாறாகச் செயற்படும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.