;
Athirady Tamil News

கொட்டாஞ்சேனையில் இருவர் உயிரிழப்பு !!

0

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டியாவத்தை சந்தியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் இருவர் வடிகால் அமைப்பில் விழுந்து உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 10 மற்றும் 14 பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவரில் இருவர் வடிகாலில் விழுந்ததாகவும் அவர்களை மீட்டு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதித்த போதும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஒருவரே முதலில் வீழ்ந்ததாகவும் அவரை மீட்கச் சென்ற மற்றையவரும் வடிகானில் சிக்கிக் கொண்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.