;
Athirady Tamil News

நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும்- டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்!!

0

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் வருங்காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்சூழலில் சாலைகளில் செல்லும் பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன். இந்தப் பணி, பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். அதற்குத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப்பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.