;
Athirady Tamil News

மகாவீர் ஜெயந்தி தினம்- வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்!!

0

நாடு முழுவதும் நேற்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி வாழத்துகளை தெரிவித்தனர்.

அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- ஜில் மற்றும் நான் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான மகாவீர் ஜெயந்தி அமைய வாழ்த்துகிறோம். இன்று, மகாவீர் சுவாமிகளின் விழுமியங்களை நாம் அங்கீகரித்து, அமைதி, உண்மை மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ முயற்சிப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.