;
Athirady Tamil News

புடினின் அதிரடி ஆட்டம்..! ஒரே இரவில் நடந்த சோதனை: திணறும் உலக நாடுகள் !!

0

கஜகஸ்தானில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ரஷ்யா ஏவியமை உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவும், ரஷ்யாவும் அணுசக்தி கையிருப்புகளை மட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன. ஆனால், அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ரஷ்யா பங்கேற்பதை நிறுத்தியது.

இந்த நிலையில் அண்டை நாடான கஜகஸ்தானில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ரஷ்யா ஏவியுள்ளது.

அஸ்ட்ராகான் பகுதியில் உள்ள கப்யுஸ்ட்ரின் யர் சோதனை தளத்தில் இருந்து ரஷ்யா ஏவிய ஏவுகணை, கஜகஸ்தானின் ஸரி-ஷாகன் எல்லையைத் தாக்கியது.

இந்த ஏவுகணை குறித்து முழு விவரங்கள் ஆரம்பத்தில் வெளியிடப்படவில்லை. ஆனால், வல்லுநர்கள் இது ஒரு சக்தி வாய்ந்த டோபோல்-எம்இ அமைப்பு என்று நம்புகின்றனர்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ‘மூலோபாய ஏவுகணை துருப்புகளின் போர்க் குழுவினர், அஸ்ட்ராகான் பிராந்தியத்தில் உள்ள கப்யுஸ்ட்ரின் யர் மாநில, மத்திய பயிற்சி மைதானத்தில் இருந்து நிலம் சார்ந்த மொபைல் ஏவுகணை அமைப்பின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தினர்’ என தெரிவித்துள்ளது.

ஆனால் இது என்ன வகை ஏவுகணை என்பது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.