;
Athirady Tamil News

நெடுந்தீவில் ஐவர் கொலை; கத்தி, கொலையாளியின் சாரம் கிணற்றிலிருந்து மீட்பு!!

0

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று அனுமதியளித்தது.

அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் சடலம் ஒப்படைப்பு!! (PHOTOS)

48 மணி நேர விசாரணைக்கு அனுமதி!!

நெடுந்தீவில் படுகொலை: தலைமறைவாகியிருந்தவர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு.. .!! (PHOTOS)

நெடுந்தீவில் நாய் மீதும் வாள் வெட்டு!! (PHOTOS)

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே ..!! (PHOTOS)

நெடுந்தீவில் கடற்படை முகாம் முன்பாகவே கோரப்படுகொலை எனின் அம்முகாம் எதற்கு ? (படங்கள்)

நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!!

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.!! (PHOTOS)

நெடுந்தீவில் சடலங்கள் மீட்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.