;
Athirady Tamil News

ஒடிசா ரெயில் விபத்து – பொறியாளர் உள்பட 3 பேர் கைது!!

0

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.