;
Athirady Tamil News

நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு- அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!!

0

நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இந்த 508 ரெயில் நிலையங்களில் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரெயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்காளத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, அரியானாவில் 15, கர்நாடகாவில் 13 என 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த மறுசீரமைப்பு பணியானது, நன்கு வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து சுழற்சியுடன் பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குகிறது. ரெயில் நிலைய கட்டிடங்கள் உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.