;
Athirady Tamil News

மணிப்பூர் பிரச்சனைக்கு காங்கிரசே காரணம்: பாராளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டிய மோடி!!

0

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, மணிப்பூர் விவகாரம் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்து பிரதமர் பேசியதாவது:- தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. வடகிழக்கு மாநிலங்கள் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்சனைக்கும் காங்கிரசே காரணம். காங்கிரசின் ஆட்சிதான் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்சனைகளுக்குக் காரணம். வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் புறக்கணித்ததன் விளைவை தற்போது அனுபவிக்கிறோம். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். உள்துறை மந்திரி அமித் ஷா புதன்கிழமை மணிப்பூர் குறித்து நீண்ட நேரம் பேசினார்.

மணிப்பூர் வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளிக்கிறது. மணிப்பூர் மாநிலம் விரைவில் அமைதியின் ஒளியைக் காணும். மணிப்பூர் மாநிலம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கமாக பேசவில்லை என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியடைந்து வெளிநடப்பு செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.