;
Athirady Tamil News

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதலில் ஐவர் பலி !!

0

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகின்ற நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா இன்று சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,

நேற்று அதிகாலை ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது. இந்த டிரோனை மொஸ்கோவில் நிறுவப்பட்டுள்ள வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது.

எனினும் குறித்த டிரோன் மொஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மையம் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாகவே உக்ரைன் மீது ரஷ்யா இன்று சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைனின் செர்னிகிவ் நகர் மீதே ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இவ்வாறாக தியேட்டர் மற்றும் பல்கலைக்கழகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.