;
Athirady Tamil News

மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!!

0

அடிஸ் அபாபாவிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். வழக்கமான அந்த சோதனையின் போது ஒரு இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர். பரிசோதனையில் இது கொக்கைன் போதைப்பொருள் என தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த கொக்கைனின் மதிப்பு ரூ.15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பயணியையும், அவரிடமிருந்து அந்த போதைப்பொருளை பெற்றுச்செல்ல நாவி மும்பை பகுதியின் வாஷி பகுதிக்கு வந்த உகாண்டா நாட்டு பெண் ஒருவரையும் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து, கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.