;
Athirady Tamil News

நல்லூரில் இரத்த தானம்!!

0

நல்லூர் மகோற்சவ சப்பர திருவிழா தொடக்கம் பூங்காவன திருவிழா வரையிலான கால பகுதியில் , நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சப்பர திருவிழாவான எதிர்வரும் 12ஆம் திகதி பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 08 வரையிலும் , 13ஆம் திகதி தேர்த்திருவிழா மற்றும் 14ஆம் திகதி தீர்த்த திருவிழா அன்று , கலாய் 08 மணி முதல் இரவு 08 மணி வரையிலும், 15ஆம் திகதி பூங்காவன திருவிழாவன்று மாலை 4 மணி முதல் இரவு 08 மணி வரையில் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண இரத்த வங்கியில் சகல வகையான இரத்தத்திற்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆலயத்திற்கு வருகை தருவோர், உயிர் காக்கும் உன்னத பணிக்கு இரத்த தானம் வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர், 0772105375 மற்றும் 0766242311 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.