;
Athirady Tamil News

அமெரிக்காவில் பூட்டிய வீட்டிற்குள் குண்டு பாய்ந்த நிலையில் 4 பேர், 3 நாய்: கொலையா? என போலீஸ் விசாரணை!!

0

அமெரிக்காவின் சிகாகோ நகரில், பூட்டிய வீட்டிற்குள் ஒரு தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள், அவர்கள் வளர்த்த மூன்று நாய்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஒருநாள் முழுவதும் வீட்டில் இருந்து வெளியே வராததாலும், வீடு பூட்டியே கிடந்ததாலும் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து சிகாகோ போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது துப்பாக்கி குண்டு பாய்ந்த இறந்து கிடந்தது தெரியவந்தது.

அந்த தம்பதி தங்களது குழந்தைகள், வளர்த்த நாய்களை சுட்டுக்கொலை செய்து, தாங்களும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் ஆல்பர்ட்டோ ரோலன், ஜோரைடா பார்டோலோமெய், அவர்களின் குழந்தைகள் ஆட்ரியல் (10 வயது), டியாகோ (7) எனத் தெரியவந்துள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர், ”சம்பவம் நடைபெற்ற இடத்தில் சந்தேக்திற்குரிய வகையில் யாரும் தங்கியதாகவும், நடமாடியதாகவும் எந்த தகவலும் கிடைக்கவில்லை, எங்களுடைய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தடயங்களை ஆராய்ந்து வருகிறார்கள்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.