;
Athirady Tamil News

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியா: போராட்ட களத்தில் மக்கள் !!

0

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

மத்திய லண்டனில் பார்க் லேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே இன்று ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு எதிர்ப்பாளர்கள் அணிதிரண்டு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் நீல நிற ஆடைகளை அணிந்து, ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளை ஏந்தியபடி போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

இந்த போராட்டமானது ஹைட் பூங்காவில் தொடங்கி மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே முடிவடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் அது சார்ந்த பதாதைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.