;
Athirady Tamil News

கல்முனையில் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம்

0

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (3) ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி பணிப்புறக்கணிப்பும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் சட்டத்தரணிகள் ஒன்றினைந்தனர்

இதில் நீதிதுறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம் சட்டத்தின் முன் யாவரும் சமம் நீதிதுறையை அச்சுறுத்தாதே பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற கோஷங்களை எழுப்பி வீதியில் ஆர்பாட்டமாக நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் நீதி கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

மேலும் இதற்கு முன்னரும் முல்லைத்தீவு குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டினார். அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து அகற்றி இரந்தார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் கடந்த ஜுலை 11 ஆந் திகதி கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் விலகி எதிர்ப்பு தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.