;
Athirady Tamil News

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

0

கிளிநொச்சி – கோனாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (12-10-2023) இரவு இடம்பெற்றுள்ளது.

இருசக்கர உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொ துவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.