;
Athirady Tamil News

‘என் மண் என் மக்கள்’ – 3-ம் கட்ட நடைபயணத்தை இன்று தொடங்குகிறார் அண்ணாமலை!

0

3ம் கட்ட நடைபயணத்தை இன்று மீண்டும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தொடங்குகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

நடைபயணம்
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார்.

இந்த நடைபயணத்தில் அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார். இதில் 3ம் கட்ட நடைப்பயணத்தை அவர் கடந்த 6ம் தேதி தொடங்கவிருந்தார்.

3ம் கட்ட பயணம்
ஆனால் பாஜக-அதிமுக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டதாலும், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவும் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 3ம் கட்ட நடைபயணத்தை இன்று மீண்டும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தொடங்குகிறார் அண்ணாமலை. இந்த பயணத்தின் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார். அண்ணாமலையின் 3ம் கட்ட நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.