;
Athirady Tamil News

வெளிநாட்டில் வேலை தருவதாக பாரிய பணமோசடி : விரைந்து செயற்பட்ட காவல்துறையினர்

0

பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பாணந்துறை வடக்கு பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் நேற்றைய தினம் (16) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாணந்துறையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து சுமார் 4.2 மில்லியன் ரூபாவை பலரிடம் இருந்து குறித்த பெண் ஏமாற்றிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு முறைப்பாடுகள்
அதன்படி குறித்த, நபருக்கு எதிராக பாணந்துறை வடக்கு காவல்துறையினரிடம் ஆறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், கெசல்வத்தையைச் சேர்ந்த 46 வயதுடையவர்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.