;
Athirady Tamil News

சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுத்தப்படுமா ..! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்க முடியாது எனவும்,நிறுவனத்தின் 49% பங்குகளை வேறு தரப்பினருக்கு மாற்றி கூட்டு முயற்சியாக நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடன்
மேலும், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.