;
Athirady Tamil News

காவல்துறை பரிசோதகரை தாக்கிய மர்ம கும்பல்

0

பண்டாரவளை காவல்துறை குற்றப்பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் சிகிச்சைக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோசடி தொடர்பில் சாட்சியமளிக்கும் வழக்கு தொடர்பில் தாம் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம்
மேலும், இந்த தாக்குதல் தொடர்பில் காவல்துறையிரால் தமக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தாம் வெலிமடை காவல்நிலையத்தில் கடமையாற்றிய போது, ​​சந்தன மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக வழங்கிய சாட்சியத்தை மீளப் பெறுமாறு கோரியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.