;
Athirady Tamil News

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

0

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார்.

அவ்வகையில், நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சமாளிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

விசேட கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (18) விசேட கலந்துரையாடலை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.