;
Athirady Tamil News

நாடாளுமன்ற செங்கோலை தொட்டவருக்கு தடை

0

நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையால் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவுக்கு நாடாளுமன்ற சேவைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இன்று முதல் நான்கு வாரங்களுக்கு இத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையானது நாடாளுமன்ற ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாடாளுமன்ற ஒழுங்கு விதிகளை அனைத்து உறுப்பினர்களும் ஒழுங்காக கடைபிடிக்குமாறும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போதே மேற்குறித்த செயற்பாடு நிகழ்ந்துள்ளதுடன் இதன் காரணமாக சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.