;
Athirady Tamil News

மலையக தொடருந்து சேவை பாதிப்பு

0

தலவாக்கலைக்கும், வட்டகொட தொடருந்து நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் டிக்கிரி மெனிகே தொடருந்து தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் மலையக தொடருந்து பாதையில் பயணிக்கும் தொடருந்து சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பயணிகள் பாதிப்பு
மேலும்,தொடருந்து பாதையை சீர் செய்யும் பணிகள் இன்று(25) இரவுக்குள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த தொடருந்தில் பயணித்த பயணிகள் கடும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.