;
Athirady Tamil News

ரஷ்ய விமான நிலையத்தில் இஸ்ரேலியர்களைத் தேடி வந்த கும்பலால் பரபரப்பு

0

ரஷ்யாவின் Dagestan பிரதான விமான நிலையத்தில் திடீரென இஸ்ரேலியர்களைத் தேடி ஒரு கும்பல் புகுந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு விமான நிலையத்திற்கு வந்துக் கொண்டிருந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தடையை மீறி உள்ளே நுழைந்த அந்த கும்பல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை கைப்பற்றியது.

இஸ்ரேலில் இருந்து விமானம் வந்து இறங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த கும்பல் இஸ்ரேல் பயணிகளைத் தேடியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை சோதித்ததாகவும் கூறப்படுகிறது. ரன்வேயில் விமானங்களை வழிமறித்தும் விமானத்தின் இறக்கைகளில் ஏறியும் அந்த கும்பல் செய்த அட்டகாசங்களின் வீடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன.

பின்னர் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அவர்கள் விமானநிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.