;
Athirady Tamil News

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

0

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராகவும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சுகயீன விடுமுறை போராட்டத்தை நாளைய தினம் முன்னெடுப்பதற்கு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 4 வருடங்களுக்கும் அதிக காலம் மின்சார சபை ஊழியர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை
“இலங்கை மின்சார சபையானது இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாகும். எனினும் நட்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் கூறி, பல வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அத்துடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது.

எனவே இந்த விடயங்களுக்கு தமது சங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளது” என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.