;
Athirady Tamil News

தேர்தலைப் பிற்போட்டு அரசியல் நடத்த முடியாது: பசில் திட்டவட்டம்

0

உரிய காலத்தில் தேசிய தேர்தல்கள் நடைபெற வேண்டும், இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்த வருடம் நடைபெற வேண்டும்.

தேர்தலைப் பிற்போட்டு அதில் அரசியல் நடத்த எவருக்கும் இடமளிக்கமாட்டோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது.

தேர்தல்களுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.