;
Athirady Tamil News

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

0

கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம்(04) 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோகத் தடை
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளை(04) இரவு 07.00 மணி முதல் நாளை மறுதினம்(05) காலை 05.00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை நடைமுறையில் இருக்கும்.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.