;
Athirady Tamil News

கனமழையினால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தாழிறக்கம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கனமழை காரணமாக பிரதான வீதி ஒன்றின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியுள்ளது.

கினிகத்ஹேன பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஹட்டன் – கொழும்பு ஏ-07 பிரதான வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு தாழிறங்கியுள்ளது.

இந்த தாழிறங்கல் இன்று (03.11.2023) காலையில் ஆரம்பமானதாகவும், இதற்கு முன்னரும் இதே இடத்தில் தாழிறக்கம் ஏற்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்ஹேன கோவிலை அண்மித்த பிரதான வீதியின் ஒரு பகுதி இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த இடத்தில் போக்குவரத்து ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் இருக்குமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.