;
Athirady Tamil News

போதை மறுவாழ்வு மையத்தில் பெரும் தீ விபத்து – 32 பேர் பலி!

0

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து
ஈரான், கிலான் மாகாணத்தில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அங்கு எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனே தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்; மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

32 பேர் பலி
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.