;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் 4 பேர் அதிரடி கைது!

0

யாழ் குருநகர் கடற்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 4 பேர் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இவ்வாறு கடலட்டையை பிடித்துக்கொண்டு இருந்தவேளை இன்றைய தினம் (05-11-2023) மண்டைதீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது, அவர்களது படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட நால்வரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை யாழில் உள்ள நீரியல்வள திணைக்களத்திற்கு கொண்டு வந்த பின்னர், நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.