;
Athirady Tamil News

வேறு மதத்தை சேர்ந்த மாணவருடன் பழகியதால் சொந்த மகளையே கொலை செய்த தந்தை: கேரளாவை உலுக்கிய சம்பவம்

0

இந்திய மாநிலம், கேரளாவில் வேறு மதத்தை சேர்ந்த மாணவருடன் மகள் பழகியாதால், அவரை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மகளை கொலை செய்ய முயற்சி
கேரள மாநிலம் ஆலுவா அருகே உள்ள ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அபீஸ் முகம்மது (43). இவர் கொச்சியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது 14 வயது மகளை கடந்த 29 -ம் திகதி இரும்பு ராடால் தாக்கியது மட்டுமல்லாமல், மகளின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

உடனே, சிறுமியின் தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தான் மருத்துவமனை நிர்வாகம் இந்த விடயத்தை பற்றி காவல்துறையிடம் தெரிவித்துள்ளது.

வேறு மதத்தை சேர்ந்த மாணவருடன் பழக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கூறுகையில், “அபீஸ் முகம்மதுவின் மூன்று மகள்களில் மூத்த மகள், பள்ளியில் வேறு மதத்தை சேர்ந்த மாணவருடன் பழகியதால் பலமுறை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அனால், அவர் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் மாணவரிடம் பேசியுள்ளார்.

மேலும், மாணவருடன் பேசிவந்துள்ள தொலைபேசியை உடைத்தாலும், அவர் வேறு தொலைபேசியில் இருந்து பேசி வந்துள்ளார்” என்றனர்.

இதனால், மகளை கொடூரமாக தாக்கிய தந்தை அபீஸ் முகம்மதுவை பொலிஸார் கைது செய்தனர். அவரின் மீது 342, 324, 326-A, 307, 75 போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாகவும், அவர் மீது கூடுதலாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.