;
Athirady Tamil News

தென்னிலங்கையில் மற்றுமொரு பரபரப்பு சம்பவம்!

0

திபுலபலஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொட்டவெல பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுகயீனம் காரணமாக குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு கடந்த 7ஆம் திகதி 1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் கழுத்தை நெரித்துக் கொலை
அதன்படி, அம்பியூலன்ஸ் இடத்துக்குச் சென்று சோதனை நடத்தியதில் பெண் உயிரிழந்துள்ளமை தெரிய வந்தது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 47 வயதுடைய பெண்ணாவார்.

இந்நிலையில், தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில் குறித்த பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை திபுலபலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை நேற்றைய தினம் தென்னிலங்கையில் இளம் பட்டதாரி யுவதி ஒருவர் காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மற்றுமு பெண்ணும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.