;
Athirady Tamil News

கொழும்பு மருதானையில் ஏற்பட்ட பதற்றம்! 21 மாணவர்கள் கைது

0

கொழும்பு மருதானை பகுதியில் இன்று(9) மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையினருடன் வாக்குவாதம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு பேராசிரியர் பிரிவொன்றை வழங்குமாறு கோரி இன்று கொழும்பு மருதானையில் உள்ள தொடருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் முயற்சித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் மற்றும் சிறிலங்கா காவல்துறையினருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டதோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரையும் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.