;
Athirady Tamil News

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

0

கேரள தலைமைச் செயலக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசியில் மிரட்டல் இன்று விடுக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இது தொடர்பாக நிதின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள தலைமையகத்திற்கு வந்த இந்த மிரட்டல் மனநலம் சரியில்லாதவர் என்று சந்தேகிக்கப்படும் நபரால் செய்யப்பட்ட அழைப்பு என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இவர் பொழியூரில் உள்ள உச்சகடாவில் வசிப்பவர் என்று தெரியவந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன், மோப்ப நாய்கள் உதவியுடன், தலைமைச் செயலக வளாகத்தில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.