;
Athirady Tamil News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து: மூடப்பட்டுள்ள வீதி!

0

மாத்தறையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் கவிழ்ந்ததில் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

இந்த தகவலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாத்தறையில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் தொடங்கொடையில் வெளியேறி மத்துகம-களுத்துறை வீதியில் பயணித்து களனிகம ஊடாக மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி வீதி ஊடாகவும் கொழும்பு நோக்கி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு வீதியின் ஒரு பாதையையாவது திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.