;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்!

0

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதே தனது கவனத்தை செலுத்துவதாக ரணில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் தாம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொருளாதாரம் தொடர்பில் உண்மையைப் பேசியதால் தோற்கடிக்கப்பட்டனர் என ரணில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.