;
Athirady Tamil News

முதல் மாவீரருக்கு சுடரேற்றி அஞ்சலி

0

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனுக்கு, ஈகைச்சுடரேற்றி இன்றைய தினம் திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள சங்கரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.