;
Athirady Tamil News

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: கடைக்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!

0

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள கடையொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வயோதிப தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடையின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான அறையொன்றில் ஆண் (78) மற்றும் பெண் (68) ஆகிய இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம் (30-11-2023) காலை சடலங்களை பார்வையிட்ட உயிரிழந்த தம்பதியினரின் மகன் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து தம்பியினருக்கு சொந்தமான சுமார் 05 பவுண் தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.