;
Athirady Tamil News

பாதாள உலகத்தை ஒடுக்க தெளிவான வேலைத்திட்டம் : தேஷபந்து தென்னகோன் தெரிவிப்பு

0

பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தெளிவான வேலைத்திட்டம் இருப்பதாக பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர், மத வழிபாடுகளில் ஈடுபட்ட தேஷபந்து தென்னகோன் இன்று (02) காலை தலதா மாளிகைக்கு வருகை தந்துள்ளார்.

வேலைத்திட்டம் ஆரம்பம்
வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பதில் காவல்துறை மா அதிபர், இதன் முடிவுகள் எதிர்வரும் காலங்களில் தெரியும் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.