;
Athirady Tamil News

இஸ்ரேல், பாலஸ்தீனம் குறித்து மன்னருடன் விவாதித்த ஜஸ்டின் ட்ரூடோ

0

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்துள்ளார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தை
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலகின் பல நாடுகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முயன்று வருகின்றன.

அந்த வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜோர்டான் மன்னருடன் இதுதொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அறிக்கை
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் பேசினார். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் அச்சமின்றி அமைதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமைக்கு கனடாவின் ஆதரவை பிரதமர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு நீடித்த அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளின் தீர்வை நோக்கிய பாதையின் அவசியம் குறித்து தலைவர்கள் விவாதித்தினர்.

பிரதமர் ட்ரூடோ இஸ்லாமிய வெறுப்பு, யூத எதிர்ப்பு மற்றும் அரேபிய எதிர்ப்பு பாகுபாடு ஆகியவற்றின் குழப்பமான அதிகரிப்பைக் கண்டனம் செய்தார்.

இது கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாம், யூத மற்றும் அரபு சமூகங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படவும், சூழ்நிலை உருவாகும்போது நெருங்கிய தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.