;
Athirady Tamil News

அப்பன் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா? நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி கேள்வி

0

நான் என்ன வார்த்தை அநாகரிகமாக பேசினேன் என்று சொன்னால் அதை திருத்திக் கொள்வேன் என தமிழக அமைச்சர் உதயநிதி, நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்துள்ளார்.

உதயநிதி பேட்டி
சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “நான் எதாவது கெட்ட வார்த்தை பயன்படுத்தினேனா? மரியாதைக்குரிய நிதி அமைச்சரிடம் நான் மீண்டும் கேட்பது ஒன்று தான். நான் இதை எனக்காக கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் ஏற்க மறுக்கிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதை வைத்து இப்படி கூறினார் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு மத்திய குழு வந்து ஆய்வு செய்தது. அவர்கள் ஆய்வு செய்துவிட்டு, மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது என்றும் கூறிவிட்டு சென்றார்கள். இதை நிதியமைச்சர் அரசியலாக்க பார்க்கிறார். நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசவில்லை.

நான் என்ன வார்த்தை அநாகரிகமாக பேசினேன் என்று சொன்னால் அதை திருத்திக் கொள்வேன். அப்பன் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா? நிதியமைச்சர் அதை கூறியவுடன் மரியாதைக்குரிய அப்பா என திருத்திக் கொண்டேன்” என்று பேட்டி அளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.