;
Athirady Tamil News

ஜனவரியில் மீண்டும் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு விண்ணப்பங் கோரல்

0

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர்
“கடந்த முறை உரியவாறு விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி அதிபரின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

அப்போது நாம் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்களை அறிந்து கொண்டிருக்கின்றோம்.

பொருத்தமானவர்கள் யார்
அனுபவம் வாய்ந்த அரச அதிகாரிகள் எவ்வாறு பொருத்தமானவர்களைத் தேடுவது, எமது அளவுகோல்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள்.

இவை அனைத்தையும் வைத்து அதிபர் ஜனவரியில் மீண்டும் விண்ணப்பங்களை கோர உத்தரவிட்டுள்ளார்.

தற்போது 20 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தேவையேற்படின் நாடாளுமன்றத்துக்கு அறிவித்து இதனை மேலும் 4 லட்சத்தால் அதிகரிக்குமாறும் அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.” – என்றார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.