;
Athirady Tamil News

விருந்து நிகழ்ச்சியில் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல்! 6 பேர் பலியான பரிதாபம்

0

மெக்சிகோவில் அதிகாலை மர்ம கும்பல் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர்.

மர்ம நபர்கள்
வடக்கு மெக்சிகோவில் உள்ள சிடெட் ஒபெகன் பகுதியில் அதிகாலை விருந்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது துப்பாக்கி ஏந்திய மூன்று மர்ம நபர்கள் திடீரென அங்கு வந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் 6 பேர் பலியானதுடன், 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், காயமடைந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது.

அதேபோல் உடனடியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வந்த உறுப்பினர்
இதற்கிடையில் தேடப்பட்டு வந்த கார்டெல் உறுப்பினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் சியுடாட் ஒப்ரென் நகரில் நடந்த கொலைகள், பிற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர் என்றும் எல்லை மாநிலமான சோனேராவில் உள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நான்காவது துப்பாக்கிதாரி ஏற்கனவே விருந்தில் இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய கார்டெல் உறுப்பினர் தப்பி ஓட முயன்றபோது கொல்லப்பட்டார்.

சோனோரா (Sonora) நகரில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே இரத்தக்களரி தரை சண்டைகளின் காட்சியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.