;
Athirady Tamil News

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

0

சில மாவட்டங்களின் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

அதன்படி குறித்த எச்சரிக்கை இன்று (30.12.2023) பிற்பகல் 2:30 முதல் நாளை பிற்பகல் 2.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அந்த வகையில் பதுளை மாவட்டத்தின் சொரணதொட்டை மற்றும் பசறை பிரதேசங்கள், கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேசம், மொனராகலை மாவட்டத்தில் மெதகம பிரதேசம், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் வலப்பனை பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலிஎல மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பல்லேகம, ரத்தோட்டை, நாவுல ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.