;
Athirady Tamil News

கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க நடவடிக்கை

0

கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இதுவரை மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ருஹுணு குமாரி ரயில் இன்று அதிகாலை 5.25 மணிக்கு பெலியஅத்த புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பிக்கும்.

இரண்டு வாரங்கள் சோதனை
கரிகா விரைவு ரயில் வார நாட்களில் மாத்திரம் இயங்கி வந்த புகையிரதம் சனிக்கிழமைகளிலும் இயங்கும் எனவும், வார நாட்களில் இரவு 8.35 மணிக்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை பயணிக்கும் ரயில் இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் அட்டவணை திருத்தத்தை இரண்டு வாரங்கள் சோதனை செய்து, தொடர் இயக்கத்தை செயல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.