;
Athirady Tamil News

இந்தியாவில் கொழுந்து விட்டு எரிந்த மேம்பாலம்: சாலை நடுவே கவிழ்ந்த எரிபொருள் தாங்கி (காணொளி)

0

பஞ்சாப்பில், மேம்பாலம் ஒன்றின் சாலை நடுவே எரிபொருள் தாங்கி ஒன்று விபத்துக்குள்ளாகியமையால் பயங்கர தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தானது, நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

மேலும், எரிபொருள் தாங்கி மேம்பாலம் நடுவே கவிழ்ந்தமையால் அதிலிருந்த எரிபொருள் அனைத்தும் சாலையில் ஊற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

வைரலாகும் காணொளி
இந்நிலையில், தீ விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

அதேவேளை, தீ விபத்து தொடர்பான புகைபடங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.